Archive for the ‘திருத்தம் தேவைப்படும் பகுதிகள்’ Category

நமது ஊழியர்களின் அதிக பட்ச ஏமாற்றுவேலையே !!! பேய் ஓட்டுவது தான் , அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரம், தேவனுடைய ஈவு , அவர்கள் ஆவிகளை பகுத்தறிகிறார்கள் என்றால் அது எந்த ஆவி , ஆணா, பெண்ணா ,சொந்த ஊர் எது, எப்படி வந்து பிடிச்சது ,அது வேப்பமரத்தில் இருந்து வந்ததா புளிய மரத்தில் இருந்து வந்ததா , என்று பகுத்தறிகிறார்கள்… அதையும் தனது சொந்த சபையார் மீதே செக் பண்றாங்க ,
என கொடுமை , தனது சொந்த விளம்பரத்துக்காக இளம் விசுவாசிகளை பகடையாய் பயன்படுத்தும் போதகர்களை நாம் இன்னும் தலையில் தான் தூக்கிவைத்திருக்கிறோம்,

நான் சென்ற ஒரு மாலை கூட்டத்தில் 2 சகோதரிகள் என்னிடம் வந்து , ” நல்லாத்தான் பிரசங்கம் பண்றீங்க ஆனா உங்க கிட்ட அந்த பவர் இல்லையே . கொஞ்சம் பவர் காட்ட கூடாதா ?” என்றார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை . பிறகு நான் அந்த போதகரிடம் விசாரித்ததற்கு அவர் சொன்னது ” இல்ல பிரதர் அவங்க பேய் ஓட்டலயானு கேக்கறாங்க ” என்றார் .

எனக்கு ஒரே ஆச்சர்யம்! ரஜினி படத்துல சண்டையும் சிவாஜி படத்துல அழுகையையும் பார்த்து வந்தவங்க தானே. அதனால அப்படித்தான் இருப்பாங்க என்று என் மனதை சமாதான படுத்திக்கொண்டேன் ஆனால் எனக்கன்பான கிறிஸ்தவ சமுதாயமே, நீ எதிர் பார்ப்பது என்ன? உன் இலட்சியம் எதை நோக்கி என்று யோசித்தால், ஆசிர்வாதம் , கடனில் விடுதலை , பில்லி சூனியத்தில் விடுதலை , பேய் ஓட்டுதல் என்றே போய்க்கொண்டிருகிறது.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு பரலோகத்தை பற்றிய விழிப்புணர்வு உள்ளது , நம்மில் எத்தனை பேர் ஆண்டவரே நான் பரலோகம் போக என்னை தகுதி படுத்தும் என்று ஜெபிக்கிறோம் !!!!!!! சற்றே சிந்திப்போம்.
ஆவிக்குரிய ஆசிர்வாதம் வேண்டும் என்று உங்களில் எத்தனை பேர் ஆசைப்படுகிறீர்கள்.

ஆண்டவரிடம் போடப்படும் அப்ளிகேஷன் எல்லாம் , அதை குடு இதைக்கொடு என்று தான். அவர் கொடுக்க வந்தது சமாதானத்தை தான் அதும் உலகம் கொடுக்காத சமாதானம். நாம் அதை கேட்காமல் மற்றதை கேட்பது
அரிசிக்கடையில் ஆம்லேட் கேட்பதுபோல் உள்ளது
இது !!!!! எந்த விதத்தில் நியாயம்..

சற்றே யோசிப்போம் ஆவிகளை பகுத்தறிந்து ஆண்டவரை அறிந்துகொள்வோம்!!!!!