போலியும் கேலியும்

Posted: மே 9, 2011 in திருத்தம் தேவைப்படும் பகுதிகள்

போலி போதகர்களால்
நிஜ போதகர்களுக்கும்
நிம்மதியில்லை!

கணக்கற்றத் திருமணம்,
காண்ட்ராக் ஊழல்;
காமக் களியாட்டம்;
கர்த்தரின் பெயரில் சூதாட்டம்;
இறுதியில்,
எயிட்ஸ் பரிசோதனை;
மயக்கத்தில் விசாரனை;
மக்களின் மன வேதனை!!

பாலியல் லீலைகளுக்கு
பைபிளை விசிட்டிங் கார்ட்டாகப்
பயன்படுத்தும் இந்த
கிறிஸ்தவ பிரேமானந்தாக்களுக்காக
இயேசு கிறிஸ்து
இன்னொரு முறை
சிலுவை சுமப்பாரா? அல்லது
சுமக்க வைப்பாரா?

பின்னூட்டங்கள்
  1. abraham சொல்கிறார்:

    அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே;

    எபிரெயர் 10:29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.

  2. Richard Felson சொல்கிறார்:

    நிஜப்போதகர்கள்
    யாருமில்லை
    கிறிஸ்துவைத் தவிர‌
    யாருக்கும் போதிக்க‌
    அருகதையில்லை
    வார்த்தையானவரின்
    வார்த்தைகளை
    பகிர்ந்து கொள்ளலாம்
    அவ்வளவே
    ஏனென்றால்
    பிதா ஒருவனை
    இழுத்துக்கொள்ளாவிடில்
    ஒருவனும் என்னிடத்தில் வாரான்
    என்று கர்த்தரே
    உறைத்திருக்கிராறே…

எதிரொலி