எங்களை பற்றி
எந்த ஒரு தனி மனிதனையும் பின்பற்றாமல், வேதத்தின் ரகசியங்களை விருப்பமுள்ளவர்களுக்கு, விரிவாகவும், விளக்கமாகவும் தெரிவிக்க
ஒன்று சேர்கிறோம். கலா.1:10;
நாங்கள் வேதமாணவர் சபையையோ, யோகோவாவின் சாட்சிகள் சபையையோ, வேறே எந்த ஒரு சபையையும் சார்ந்தவர்கள் அல்ல.
சத்தியத்தை சத்தியமாகவே சொல்வதில் பெருமைகொள்கிறோம். யோவான்.17:17;
மேலும் எங்களின் நோக்கம் பணம் வாங்குவதும் அல்ல.
பரிசுத்த வேதாகமத்தின் மீது கொண்ட பற்றுதலாலும், கிறிஸ்துவமார்க்கம் தவறாகப்போவதாலும், ஏற்பட்ட உந்துதலினால் உருவாக்கப்பட்டதுதான் எங்களின் இந்த குற்றங்கள் மட்டும்
குறிப்பு :
பிதாவை சென்றடைய குமாரன் மூலமாய் பரிசுத்த ஆவி துணையோடு போராடும் எவரும் எங்களின் சகோதர சகோதரிகளே; சபை பாகுபாடின்றி வரவேற்கிறோம் .
எச்சரிக்கை :
வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலா.8:7
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலா.1:6.
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலா.1:10.
உண்மை சத்தியத்தில் அவர் வரும் வரை நிலை நிற்போம் என்ற மனஉறுதி உள்ளவர்கள் மட்டும் துணிச்சலோடு உள்ளே வாருங்கள் .
தேவ சமாதனம் ஆமென்.
உண்மை சத்தியத்தில் அவர் வரும் வரை நிலை நிற்போம்
பரலோகம் போய்தான் ஆகவேண்டுமா ?
பிலிப்பியர் 3:20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அப்போ வாங்க !!!!!!!!!!!!!!!
அற்புதமான தளம்… வாழ்த்துகள்
நன்றி நண்பரே தங்களின் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன!!!!!!!!!!!!!!!!!
Biblical references are appropriate .but is not very clear y u hav done this
If the biblical references are appropriate, then what is not clear about this? Can you project it more clearly, so that every thing is clear with the help of biblical verses!!